சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஜி-20 கல்வி பணிக்குழுவின் முதலாவது கூட்டம் வருகிற பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முன்னதாக இதன் தொடக்க விழா நிகழ்வாக சென்னை கிண்டி ஐ.டி.ஐ வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி பூங்காவில் ஜனவரி 31-ஆம் தேதி கல்வியியல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து உலகளாவிய தளத்தில் கல்வித்துறையில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய காட்சி நடைபெற உள்ளது. இதில் ஜி 20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற அமைப்புகள் போன்றவற்றின் 63 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்கலைக்கழக மானிய குழு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் என்.சி.இ.ஆர்.டி கல்வி அமைச்சகம் போன்றவற்றின் அதிகாரிகள் கல்வித்துறை நிபுணர்கள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் போன்ற எல்லோரும் இதில் பங்கேற்க உள்ளனர். சென்னை ஐ.ஐ.டியில் நடைபெறும் கருத்தரங்கிற்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் கே சஞ்சய் மூர்த்தி தலைமை தாங்குவார். இந்த கருத்தரங்கின் முன்னுரிமை மையப் பொருளாக, தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறையை அனைத்து நிலையிலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தரம் உள்ளதாகவும், ஒத்துழைப்பு உடையதாகவும் மாற்றுவதாக இருக்கும்.

இதனையடுத்து ஜி-20 உறுப்பு நாடுகளும் வரவேற்கப்பட்ட நாடுகளிலும் பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகள் பற்றி இந்த கருத்தரங்கில் சென்னை ஐஐடியின் இயக்குனர் பேராசிரியர் காமகோடி விவரிக்க இருக்கின்றார். இதனை தொடர்ந்து மூன்று அமர்வுகளில் குழு விவாதம் நடத்தப்பட உள்ளது. அதாவது மழலையர் பள்ளியில் இருந்து பிளஸ் டூ வகுப்பு வரை கற்பவர்களுக்கு எளிதாகவும் சமமாகவும் கல்வி கிடைக்க செய்தல், உயர்தர கற்றல் வாய்ப்புகள் கிடைக்க செய்தல், திறன்சார் கல்வி மற்றும் பயிற்சி அளிக்க உருவாக்கப்படும் தொழில் நுட்பங்கள் போன்றவை ஆகும்.

நம் பள்ளி நான் முதல்வன் இது தொடர்பாக நடைபெற உள்ள கண்காட்சியில் 50-கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றிருக்கும். தமிழகத்தில் இருந்து மாநில கல்வித் துறையின் நான் முதல்வன் நம்ம பள்ளி திட்டங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்றவற்றின் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெறும். மேலும் மத்திய அரசின் இந்திய ஸ்வையம், சமர்த், தீக்ஷா போன்ற திட்டங்கள் குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உபகரணங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப்  இந்தியா நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபியா, சீனா, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் சேர்ந்த நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்க இருக்கிறது.