ஜம்மு காஷ்மீர் குப்வாராவின் மச்சல் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ராணுவமும், காவல்துறையும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், குப்வாராவில் உள்ள மச்சல் செக்டாரின் காலா காட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு & காஷ்மீரில் (PoJK) இருந்து எங்கள் பக்கம் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர் என ஜம்மு காஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளது.