இமாசச்சலப்பிரதேசம் மணாலி -லே வழித்தடத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் 2 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்தவர்கள் ஹரியானா ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா (32) மற்றும் ஜம்முவிலுள்ள சரிகா விஹார் லோயர் ரூப் நகரைச் சேர்ந்த கபாலா சிங் (48) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

உயிரிழந்த 2 பேரும் நடக்கும்போது திடீரென்று மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதாக உடன் பயணித்தவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆகவே மணாலி-லே வழித் தடத்தில் போகக்கூடிய சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.