திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான ஏற்பாடை முன்னிட்டு டிசம்பர் 22, 24ஆம் தேதி வரையிலும் அதனை தொடர்ந்து டிசம்பர் 31,  ஜனவரி 1ஆம் தேதி நடைபெற இருந்த தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதால் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்றும் ஜனவரி 1 முதல் வரையிலான தரிசன டிக்கெட் விற்று  தீர்ந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே ஜனவரி 1ஆம் தேதி வரை இலவச தரிசன டிக்கெட் மற்றும் 300 ரூபாய் தரிசன டோக்கன் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது. இதனால் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கும் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆனால் ஜனவரி 2 முதல் மீண்டும் சர்வ தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.