இந்தியாவில் வங்கி கணக்குகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் கூடுதல் பாதுகாப்பு வட்டி வழங்கப்படுவதால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் அஞ்சலக திட்டங்களில் இணைகின்றனர். அதன்படி போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் இரட்டிப்பு லாபத்தை பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகை 115 மாதங்கள் அதாவது 9 ஆண்டு 7 மாதங்களில் இரட்டிப்பாக உங்களுக்கு வழங்கப்படும். அதாவது நீங்கள் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 20 லட்சம் ரூபாயாக பெறலாம். கல்வி, வியாபாரம் மற்றும் திருமணம் முடித்த எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்பினால் இந்த திட்டத்தில் இணைந்து நீங்கள் பயன்பெறலாம்.