மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.

சதுரகிரியில் ஜனவரி ஒன்பதாம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி 11ஆம் தேதி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி ஒன்பது முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.