தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் கணினி வழியில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி டெட் இரண்டாம் தாள் தேர்வை ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரையான காலகட்டத்தில் கணினி வழியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத உள்ள பட்டதாரிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு http://trb.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக பயிற்சி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.