பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார்.

தினமும் தனக்கு வரும் காட்சிகளை கணிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார்.  இது கடவுள் தனக்கு கொடுத்த சக்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் வருடத்தில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் உயரும் மற்றும்  இதனால் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் தாக்குவதால் பயிர்கள் சேதம் அடைந்து பஞ்சத்தில் மக்கள் இறப்பார்கள் என்று கூறியுள்ளார் .உயிரியல் ஆயுத தாக்குதல்கள் உருவாகும் என்றும் ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

2024ல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இருப்பதாகவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலக பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்துமாம். புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும். உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய போர் ஒன்று நடக்கும். இதே வருடம் ஏலியன்களை காண்போம் என்று கூறியுள்ளார். இவர் கூறியதில் அடுத்தடுத்து நிலநடுக்கம் தற்போது ஜப்பானில் நடைபெற்றது. மற்றொன்று ஏலியன் அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் உள்ள மியாமியில் உள்ள மால் ஒன்றில் இறங்குவதாகவும் புகார் எழுந்த நிலையில் இது உலக நாடுகளில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.