இன்றைய காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து விட்டது. சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு கரணம் மாணவர்கள் அதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக சமூக நலத்துறை நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக வாங்கி கொடுக்கப்பட்ட செல்போன்களால், சமூகவலைத்தளத்தில் அதிக அளவில் ஈடுபாடு காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குழந்தை திருமணங்களில், 60% அளவிற்கு, செல்போன் காதலே காரணம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.