
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி தாட்சாயிணி. இந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகன் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன் துரைக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவர் யாரிடமாவது செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.
சிலருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் செல்போனில் இருந்தது. இது குறித்து தாட்சாயினி தனது கணவரிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான துரை வீட்டிற்கு வராமல் மகனின் படிப்புக்கு பணம் தராமல் இருந்துள்ளார்.
இதனால் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு தாட்சாயிணி வேலைக்கு சென்று அந்த சம்பளத்தை வைத்து மகனை படிக்க வைத்துள்ளார். சமீபத்தில் தாட்சாயிணி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது துரை வேறு ஒரு பெண்ணுடன் சொல்வதை பார்த்தார். இது குறித்து கேட்டபோது நான் எப்படி வேண்டுமானாலும் செல்வேன்.
அதை நீ கேட்கக்கூடாது என துரை வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மறுநாள் தலைக்கேறிய மதுபோதையில் வீட்டிற்கு வந்த துரை தனது மனைவியைத் திட்டி கோபத்தில் கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் படுகாயமடைந்த தாட்சாயிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாட்சாயிணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.