உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு சில ஊடகங்களில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  இதனையடுத்து இதுபற்றி கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னை பற்றி பொய்யான செய்தி பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…. அது என்னவென்றால் செய்தி வெளியிடும்போது  தயவு செய்து என்னுடைய நல்ல புகைப்படத்தை பயன்படுத்துங்கள்’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.