சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.