சென்னை வெள்ளத்தில் சிக்கி, தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், வெள்ளத்தில் மீட்பு பணியில் தலைமை காவலர் ஈடுபட்டிருந்தார். இவர், பணியை முடித்துவிட்டு சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

கீழ்ப்பாக்கம் அருகே மண்டபம் சாலையில் விபத்தில் சிக்கிய இவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.