சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் வருகின்ற ஜூலை 10-ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தன்னுடைய சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட்விமானம் இயக்கப்பட்ட வந்த நிலையில் சில காரணங்களால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி வருகின்ற ஜூலை 10ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 10.20 மணிக்கு, இரவு 7.30 மணிக்கு தினசரி சேவை தொடங்குகின்றது. அதனைப் போலவே மதுரையிலிருந்து சென்னைக்கு நண்பர்கள் 12.05 மணிக்கு, இரவு 8.55 மணிக்கு விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.