தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று முதல் படிப்படியாக குறைய தொடங்கியது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் ஆவின் பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்கான பணியில் அதிக அளவில் மீனவர்களின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.