மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. இந்த நிலையில், அடுத்த புயலின் பெயர் என்னவாக இருக்கும் என அனைவரின் மனதிலும் கேள்வி எழத் தொடங்கி இருக்கிறது. மிக்ஜாம்-ஐ தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த “ரெமல்” (Remal) என்ற பெயர் ஆகும்.

அதேபோல அதற்கடுத்து வரும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த “அஸ்னா” என்ற பெயரும் சூட்டப்படும். இந்த வகையில், இன்னும் சுமார் 150 புயல்களுக்கு பெயர் பட்டியலை தயாராக வைத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.