சென்னை மற்றும் நெல்லைக்கு இடையே வாராந்திர அடிப்படையில் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை வாரம் தோறும் வியாழக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கமாக நிலையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் ரயில் சென்னைக்கு இரவு 11.15 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.