சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் காரணமாக தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 15 நிமிடங்களுக்கு என்று ஒன்று இயக்கப்படுகிறது. இதனால் தினமும் பல லட்சம் மக்கள் பலனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், திரிசூலம் – மீனம்பாக்கம் இயைடே தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.