தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்து வரவுள்ளதால், டிச.14இல் நடைபெறவுள்ள தேதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை விஜயகாந்திடம் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரமலதா தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.