சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான டெண்டர் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மொத்த அமைப்பையும் கையகப்படுத்துவதற்கான வணிக திட்ட அறிக்கை தொடர்பான டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்களும் இதில் அடங்கும்.