சென்னை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக ரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையில் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது நான்காவது வழித்தடமாக சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பறக்கும் ரயில் பணிகள் ஆனது இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது சென்னையில் இயங்கி வரும் ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதாவது சென்னை கடற்கரை முதல் சிந்தாரிப்பேட்டை வரையிலும் இன்று  முதல் கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் ரயில் பணிகள் அமைக்கும் பணிகள் ஆனது முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.