தமிழகம் முழுவதும் இதுவரை 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில் புது ரேஷன் கார்டுக்கும்  பலரும் விண்ணப்பிக்கும் வருகிறார்கள். தற்போது புதிய ரேஷன் கார்டு பெற வேண்டும் என்றால் பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை முழுமையாக நீக்கிவிட வேண்டும். அதன் பிறகு தனியாக வசிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து புதிய ரேஷன் கடை பெறலாம்.

ஆதார், கரண்ட் பில் மற்றும் சிலிண்டர் பெறும் ரசீது போன்றவை இதற்கு தேவை. மேலும் குழந்தைகளுடைய பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் என்றால் கட்டாயம் ஆதார் கார்டு தேவைப்படும். முதலில் பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானதாக இருந்தது. தற்போது ஆதாரும் அவசியமாகிவிட்டது. ரேஷன் கார்டு பெற நினைப்பவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்தால் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.