சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம், சூலூர் பேட்டை இடையேயும் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.