தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள பழமையான அகஸ்தியா திரையரங்கை தனது நண்பர்களுடன் இணைந்து வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அகஸ்தியா திரையரங்கை சீரமைக்கும் பணிகள்தற்போது நடைபெற்று வரும் நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி இந்த திரையரங்கை புதுப்பொலிவுடன் திறக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வடசென்னையில் நவீன வசதிகளுடன் திரையரங்குகள் இல்லாததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இந்த திரையரங்கை பல புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.