நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நாயகிகளில் ஒருவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகிய கீதா கோவிந்தன் திரைப்படம் வாயிலாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து பிரபலமான சமயத்தில் இருந்தே இருவருக்குள்ளும் காதல் உள்ளது என்ற செய்தி தற்போது வரை பரவி வருகிறது. இவர்கள் இருவருமே தாங்கள் நட்பாக மட்டும்தான் பழகுகிறோம் என பலமுறை கூறியுள்ளனர்.

அதே நேரம் சமீப நாட்களாக விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் மற்றொரு தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவருடன் ராஷ்மிகா நெருங்கி பழகுகிறார் எனவும் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் பேபி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உற்சாகமாக பங்கேற்றார் ராஷ்மிகா மந்தனா.

மேடையில் அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கிருந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அவரை வதினா(அண்ணி) என அழைத்து தொடர்ந்து கோஷம் போட அதைக் கேட்டு பேசுவதை நிறுத்திவிட்டு வெட்கத்தாலும் சிரிப்பாலும் முகம் சிவந்துவிட்டார் ராஷ்மிகா. மேலும் அந்த விழாவில் ஆனந்த் தேவரகொண்டா பேசியபோது, டியர் காம்ரேட் படத்தில் இடம்பெற்ற நீ நீலி கண்ணுலோனா என்ற பாடலை ராஷ்மிகாவுக்கு டெடிகேட் செய்வதாக கூறினார். இதன் வாயிலாக தனக்கும் விஜய் தேவரகொண்டாவுக்குமான நட்பு இன்னும் ஸ்ட்ராங்காகத் தான் உள்ளது என்பதை உறுதிசெய்துள்ளார் ராஷ்மிகா.