சென்னையில் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி தான் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 13 பள்ளிகளுக்கு இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருப்பதாகவும் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.