சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை நான்காவது வழித்தடம் அமைப்பை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுவதால் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் வரை நான்காவது வழித்தடம் அமைத்து விரிவாக்க பணிக்கு 279 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை தொடங்கும் வகையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.