தமிழக அரசானது மக்கள்  நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் வழங்குதல். இந்நிலையில் இதனை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் ரூ.1,500ல் இருந்து 32,000ஆகவும், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 1,500ல் இருந்து 2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 750ல் இருந்து 1,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது