சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவெற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும். சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி பறக்கும் ரயில் நாளை வழக்கம் போல் இயங்கும். 30 நிமிடத்தில் ஒரு ரயில் என இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் பழைய கால அட்டவணைப்படி வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

மேலும் சென்னை – நெல்லை, நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – நெல்லை, நெல்லை – எழும்பூர் வந்தே பாரத் ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூர் – நெல்லை விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.