கேலோ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார். பிரதமர் வருகையின் போது, ஐ.என்.எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை, அதனை சுற்றியுள்ள சாலைகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நெரிசல் இருக்குமென்பதால், இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் வாகனங்களை இயக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்