இந்தியாவில் ஒடிசா ரயில் விபத்துக்கு பின் தொடர்ந்து அதிகளவிலான ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை முதல் திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் புறநகர் ரயில் இன்று காலை 9.40 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. அதோடு  இந்த ரயில் பார்வையாளர்களின் மத்தியிலேயே தடம் புரண்டதால் பயணிகளின் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியிருக்கிறது.

சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் புறநகர் ரயில் தடம் புரண்டதால் கடைசி பெண்கள் கோச் சக்கரங்கள் தடம்புரண்டு பிறகு 9 பெட்டிகளும் தடம்புரண்டிருக்கிறது. அதன்பிறகு தீவிர மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதில் உயிரிழப்புகள் எதுவுமில்லை என்று ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.