சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. போட்டியில் 8 சர்வதேச, இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம், தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது.