சென்னையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் மட்டும் நிவாரணம் வழங்கப்படும். அடுத்த 10 நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.