ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 20 இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என்பதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை இன்று மற்றும் நாளை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் ஒன்பது நிமிட இடைவேளைக்கு பதிலாக ஆறு நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்வதற்கு பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.