
விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநாடு தொடரில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும் பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டு திடலில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ட்ராக் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் வரை தேசிய நெடுங்காலையில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர்களை அகற்றுமாறு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.