
சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர் எஸ் பாரதி, அரசியலில் இருந்து செல்வதற்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவுவேன் என பேசி இருந்தார். அறிவாலயத்திலிருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது. ஒரே மேடையில் நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா? தமிழகத்தில் காவி ஆட்சியை மலர்ந்தே தீரும் என்பது ஒரு கற்பனையானது. முதலமைச்சர் தன்னுடைய வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தவர்.
எதையும் சந்திக்கும் ஆற்றலும் திறமையும் அவருக்கு உண்டு என்று பேசிய அமைச்சரிடம் அதிமுக குறித்து கேள்விகளுக்குப் பட்டது. அதற்கு அதிமுகவை பற்றிய கேள்வியே கேட்க வேண்டாம், அவர்களின் நெருக்கடியில் உள்ளனர். மேலும் அவர்களைப் பற்றி விமர்சிக்க விருப்பமில்லை. ஒன்றிய அரசின் திட்டங்களை நாங்கள் காப்பியடிக்கவில்லை என்பதோடு ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும் என ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.