அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் அங்குள்ள ஒரு வீட்டில் அந்த மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.