மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அருணிடம் கேள்வி எழுப்பிய போது, தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும், எந்த தொகுதியில் போட்டி என்பதை தலைமை முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இளைஞர்களை களத்தில் இறக்குவதே உதயநிதியின் திட்டம் என்பதால் அருண் நேருவுக்கு சீட் உறுதி என்றே கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூரில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.