திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பணிகாளானது  இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கியுள்ளது.

இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு  சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் இந்த அறிவிப்பினால் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.