விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நடிகை அருந்ததி நாயருக்கு ஐ சி யூ வில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது சகோதரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய அருந்ததியின் உடல் நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வருத்தம் தெரிவித்து அவரது சகோதரி அனைவரது பிரார்த்தனையும் ஆதரவும் தொடர்ந்து தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முடிந்தால் நிதி உதவி செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.