சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி என தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் இதுவரை 31 வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரியங்கா காந்தி பேசிய நிலையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது..

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையே கூட்டணி உறுதி என்று அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார். அகிலேஷ் யாதவ் கூறியதாவது, ‘காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்ததில்லை. பாஜக செய்த தில்லுமுல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது’ என தெரிவித்தார்.