தேர்தலில் INDIA கூட்டணியில் போட்டியிடுவது உறுதி என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க போவதில்லை என்று அகிலேஷ் நேற்று பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உத்திரபிரதேசம் மாநிலத்தின் 18 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.