விஜய்யை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்த முதல் நபர் நான் தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் பாணி இருக்கும், தம்பி விஜய் முழு நேரமாக அரசியல் பணி செய்வது என்பது அவருடைய பாணி, நான் முழுநேர அரசியல்வாதி கிடையாது. இது என் பாணி, வைரமுத்துவை போல் நான் பாட்டு எழுத முடியாது, என்னை போல் அவர் எழுத முடியாது, ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமை இருக்கும் என கமல்ஹாசன் கூறினார்.