ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நினையில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என மறுக்கவோ, பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வரும்போது அனைத்து பொருட்களையும் வழங்க அறிவுறுத்திய தமிழக அரசு, பொருட்களை தடையின்றி அனுப்ப TNCSC-யை கேட்டுக்கொண்டுள்ளது.