ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நக்ஷத்ரா. அந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே விஸ்வநாதன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

அதன் பிறகு சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நட்சத்திராவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nakshu A இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nakshathra_viswanathan)