பிரபல தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர். ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த சீரியலின் நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த ஜோடி தற்போது சின்ன திரையின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளது. ராஜா ராணி சீரியல் மூலமாக தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் சஞ்சீவ் ரொமான்ஸ் செய்யும்போது பொசசிவ் ஆக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த  அவர், ஆமாமா ஆகி இருக்கிறார். என்னுடைய ரொமான்ஸ் காட்சிகளை பார்க்கும் பொழுது என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீரியல்ல என்று கேட்பார். ரொமான்ஸை பார்த்துவிட்டு அப்பப்போ ஒரு லுக்கு விடுவார் என்று கூறியுள்ளார்.