தமிழ் சினிமாவில் படையப்பா, முன்னோடி, பெற்றெடுத்த பிள்ளை, பொண்டாட்டியே தெய்வம், புது வசந்தம், நட்புக்காக உள்ள பல படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தாரா. 50 வயதாகும் இவர் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இவர் ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த போட்டோ இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சித்தாரா சாமியாருக்கு அடிமை ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், இவர் கேரளாவில் ஒரு சாமியாருக்கு அடிமையாகி விட்டார். அதாவது சாமியாருக்கு வேண்டிய உதவிகளை செய்வது போல முழுமையாகவே சாமியாராக மாறிவிட்டார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் முதிர் கனியாகவே வாழ்ந்து வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார் பயில்வான். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பாக நடிகை சித்தாரா தான் ஒருவரை காதலித்ததாகவும் அந்த காதல் நீண்ட நாட்களாக தொடரவில்லை. காதல் கை கூடாத காரணத்தால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.