இயக்குநர் சேரன் முதல்முறையாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களான இடும்பாவனம் கார்த்திக் (வேதாரண்யம்) மற்றும் கார்த்திகேயன் (பல்லாவரம்) ஆகியோரை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்லாவரம் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் தம்பி கார்த்திகேயன் ஒரு மருத்துவர்… மக்களுக்காக இறங்கி அனைத்து போராட்டங்களிலும் நின்றவர்.. அறிவு சார்ந்து மக்களை அழைத்துச்செல்ல முயல்கிறார்.. தனது அரசியல் பயணம் பற்றிய காரணத்தையும், வேட்பாளராக களம் காணும் நோக்கத்தையும் தெளிவாக மக்கள்… https://t.co/ZKZTWxIgA4
— Cheran Pandiyan (@CheranDirector) April 10, 2026
மக்களுக்காகக் குரல் கொடுக்கவும், சேவை செய்யவும் இவர்கள் தகுதியானவர்கள் என்று சேரன் குறிப்பிட்டுள்ளார். எளிய மக்களின் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் ஒலிக்கவும், அது அரசின் காதுகளுக்குச் சென்றடையவும் இவர்களைப் போன்றவர்கள் வெற்றி பெறுவது அவசியம் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேதாரண்யம் வாக்காளர் பெருமக்களே… துணிச்சல் உள்ள ஆண்மகன், தான் மட்டுமல்லாது இம்மண்ணும் எம்மண்ணின் மக்களும் சமநிலையில் சுகமாக எல்லா வளமுடனும் வாழவேண்டும் என ஆசைப்படும் அன்புத்தம்பி இடும்பவனம் கார்த்திக் வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சியின் பீரங்கியாய் போட்டி போடுகிறார் ..… pic.twitter.com/mOo9jhpg5N
— Cheran Pandiyan (@CheranDirector) April 9, 2026
