அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கார்வே அவன்யூ பகுதியில் செங் வான் சோய் எனும் சீன வம்சாவளி தொழில் அதிபர் ஒருவர் சொந்தமான ஹோட்டல் வைத்துள்ளார். இந்த ஹோட்டலில் சீன புத்தாண்டு தினம் நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஓட்டலில் நுழைந்த மர்மநபர் ஒருவர் அதிநவீன துப்பாக்கியுடன் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த மர்ம நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நகரம் முழுவதும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.