சீன நாட்டின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜாடோங் நகரில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நில சரிவில் சுமார் 47 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

500க்கும் மேற்பட்டவர்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.